TAMIL

தமிழிசைக் கலைக் களஞ்சியம் - தொகுதி 1 (மொத்தம் 4 தொகுதிகள்)

Book information

Publisher
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக் கழகம்
Year
2006
Language
tamil
Format
PDF
Filesize
14 MB (14229336 bytes)
Volume
1
Edition
இரண்டாம் பதிப்பு; முதல
Pages
419\419
Topic
Art Music
Time added
2017-09-16 23:14:02

Description

முதல் பதிப்பு: 1992 இரண்டாம் பதிப்பு : 2006 இந்த மின்னனுப் பதிப்பானது 2006 பதிப்பை அடியொற்றியது. முதல் தொகுதியின் மொத்த பக்கங்கள் : 419 ( A4 அளவு) ..................................................... கலைக்களஞ்சிய ஆசிரியரின் முகவுரை சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் தேவார திவ்ய பிரபந்த நூல்களிலும் காணக்கிடைக்கும் இசையியல் கருத்துக்களை வளமையாக வெளியிடல் வேண்டும் என்னும் ஆவலில், பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்புமிகு முனைவர் ச.முத்துக்குமரன் அவர்களை வேண்டினேன். ஏழிசையாய் இசைப்பயனாய் இலங்கும் இறைவனின் திருவருள் கூட்டி யது. துணைவேந்தர் தமிழிசைக் கலைக் களஞ்சியம் ஒன்றை உருவாக்குமாறு பணித்தருளினார். இசைக் கலைக் களஞ்சியத்தைப் படிப்படியாய் அமைத்துவந்த பல்வேறு நிலைகளிலும் துணை வேந்தர் பல்லாற்றானும் நல்லாற்றுப்படுத்தி உதவிகளை நல்கினார். சென்ற முந்நூறு ஆண்டுகளில் தென்னகத்தில் வாழ்ந்து வந்த அறிஞர்கள் சமசுகிருதத்திலும், தெலுங்கிலும் நூல்களை எழுதி வைத்திருந்தாலும் அவையாவும் தமிழக அறிஞர்கள் தொன்று தொட்டுப் பலநூற்றாண்டுகளாகப் படிப்படியாய் முயன்று வளர்த்துக்கொண்டு வந்த கருத்துக்களின் விளைவே என்பது பெருந்தகை சமுத்துக்குமரன் ஆங்காங்குக் கூறிவரும் செய்தியாகும். எனவே சென்ற முந்நூறு ஆண்டுகளாக சமசுகிருதத்திலும், தெலுங்கிலும் வெளிவந்துள்ள இசைச் செய்தி களும், இசைச் சொற்றொடர்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றைத் தோற்றுவித்தற்கு மூலமாக நின்றுதவிய தமிழ்நூற் செய்திகளும், சொற்றொடர்களும் ஆங்காங்கு இணைத்துக்காட்டப்பட்டுள்ளன. இப்பனுவலில் கிட்டத்தட்டத் தொள்ளாயிரம் தலைச்சொல்கள் விளக்கப்பட்டுள்ளன. பண்ணின் சுரவகைகள் எளிமையாகக் குறித்துக்காட்டப்பட்டுள்ளன. இசையிலக்கணக்குழப்பங்கள் இவை இவை எனக் காட்டுவதற்கும், இசைக் கண்டுபிடிப்புக்களின் தெளிவை நிறுவுவதற்கும் கட்டகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தென்னக இசைக்கலை, தொன்மை தொட்டுத் தொடர்ந்து படிப்படியாய் வளர்ந்து வந்துள்ளது. தொல்காப்பியத்தில் இசையியல் என்னும் எழில்நங்கை பிறந்து பாட்டிலும் தொகையிலும் தவழ்ந்து விளையாடி சிலப்பதிகாரத்தில் கட்டழகுக் கன்னியாகி, தேவார திவ்ய பிரபந்தப் பக்தி யிலக்கியங்களில் தாயாகி விளங்குவதைக் களஞ்சியம் விளக்கியுள்ளது. தொல்காப்பியத்தில் காணக் கிடக்கும் இசையிலக்கணக் கூறுபாடுகள் ஏற்ற எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன. தியாகராச சுவாமிகள் முதலிய திருவாரூர் இசை மூவர்களும் இவர்கட்கு முன்னர் வாழ்ந்த முத்துத் தாண்டவர் முதலிய சீர்காழி இசை மூவர்களும், இவர்கள் யாவர்க்கும் இசை நெறிகளை அமைத்துக் காட்டிக் கோயில் கொண்டுள்ள நாயன்மார்களும் ஆழ்வார்களும் கூர்தல் முறையில் சிறப்பிடம் பெறுகிறார்கள். இவை யாவற்றிற்கும் மேலாகச் சிலப்பதிகாரமும் அதன் இரு பெரும் உரைகளும் சிறப்பிடம் பெறுகின்றன. சிலப்பதிகாரத்தில் அவிநய ஒற்றைக்கை முப்பத்து மூன்றுக் கும் ஓவியம் வரைந்து காட்டப்பட்டுள்ளன. செய்யுளில் காணப்படும் விரல்களைப் பற்றிப் படித்துக் கொண்டு மடித்துவைத்துப் பயன்படுத்துக. இசை நூல்களை எழுதிய அறிஞர்கள் இந்த அகராதியில் இடம் பெறுகின்றார்கள். செயல் துறைக் கலைஞர்கள்(Performing Artists) ஆகிய பாடல்களைப்பாடுபவர்களையும் இசைக்கருவிகளை இசைப்பவர்களையும் பற்றிய குறிப்புக்கள் நூலின் ஈற்றில் இடம் பெறுகின்றன. தமிழகத்தில் கல்லூரிகளில் இன்று கற்பிக்கப்படும் பாடங்கள் அனைத்திற்கும் கலைச்சொல்களை நற்றமிழில் ஆக்கி அகராதிகளாக அமைத்து பயன்படுத்தி வருகின்றார்கள். இசைத் துறைப் பாடங்கள் மட்டுமே இசைக் கல்லூரிகளில் ஏறத்தாழ 100 க்கு 65 விழுக்காடு வட சொல்லைப் பயன்படுத்திக கற்பிக்கப்பட்டு வருகின்றன. இக்குறை நீங்க இக்கலைக் வழிகளஞ்சியம் முதன்முதல் வழிகாட்டுகின்றது: தூண்டுகின்றது. மேலும் வேர்ச்சொல் விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருப்பது இக்களஞ்சியத்தின் ஓர் சிறப்பாகும். வீ.ப.கா.சுந்தரம்

Similar books